Monday, 30 December 2013

Sri Suyambu AngalaParameshwari Sakthi Peedam About The Temple

suyambuangalamman.com

                                          அருள்மிகு ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேஸ்வரி சக்தி பீடம்

                                 தேங்காயில் சுயம்புவாக தோன்றிய அன்னை  அங்காள பரமேஸ்வரியின் வரலாறு

     மூல சக்தி, முதல் சக்தி, ஆதார சக்தி தலைமைத் தாய் என்றும் போற்றப்படும் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கேட்டார்க்கு கேட்ட வரமருளும் கலியுகக்த்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள்.
     அத்தகைய மகா சக்தியான அன்னை சுயம்பு அங்காள பரமேஸ்வரி சக்தி பீடத்தில் தேங்காயில் சுயம்புவாக தோன்றி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரமருளி அருளாட்சி புரிந்து வருகிறாள்.
     இங்குள்ள அன்னையின் சுயம்புத்திருக்கோலம் வேரெங்கும் காணக்கிடைக்காத ஓர் அரிய காட்சியாகும்.
                                              
                                                 பக்தர்களின் மேல்மலையனூர் பயணம்

     சக்தி பீடத்தின் பக்தர்கள் அன்னையின் மேல் கொண்டுள்ள மிகுந்த பக்தியின் காரணமாக, தங்களால் இயன்ற பொழுதெல்லாம் அன்னையை தரிசிக்க அன்னை குடிகொண்டுள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று வருவது வழக்கம்.
            
                                                அன்னையின் திருவிளையாடல்

     மும்மூர்த்திகளுக்கு முதல்வியாய், சிவபெருமானுக்கே உண்டான பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியவள்.  ஈரெழு பதினான்கு லோகங்களையும் படைத்து, காத்து, அழித்து, அனைத்திற்கும் காரணியாகவும், பரிபூரணியாகவும் தன்னை வணங்கும் பக்தனுக்கு நித்யானந்தம் அருள்பவளாக, கருணையே வடிவான அன்னை தன்னை நாடி வரும் பக்தர்களை தேடி தானே செல்ல எண்ணம் கொண்டு திருவிளையாடல் புரியத் தொடங்கினாள்.

                                                அன்னையின் அருள்வாக்கு

     ஆலயத்திற்கு செல்லும் சக்தி பீட பக்தர்கள் ஆலயத்தில் தங்கி அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வது வழக்கம்.  அதன்படி இம்முறையும் அன்னைக்கு சிறப்பு பூஜை செய்வதற்குண்டான அனைத்து ஆயத்தப் பணிகளை அனைவரும் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் ஈடுபட்டிருந்தனர்.  பூக்கட்டுதல், சமையல் செய்ய காய்கரிகளை நருக்குதல், தண்ணீர் கொண்டு வருதல், சமையல் மற்றும் பூஜைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கசெல்லுதல் பாத்திரங்களைக் கழுவுதல் என அனைவரும் ஒவ்வொரு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
     அன்னைக்கு படையல் போடுவதற்குத் உண்டான அனைத்து அன்னமும் தயாரிக்கப்பட்டு கரகம் அலங்காரம் செய்து உடுக்கை பம்பை முழங்க பூஜை ஆரம்பமானது "அங்காளித் தாயே அருள்வாக்காய் வருபவளே ஆரணங்கே சொற்காரணி அண்டமெல்லாம் ஈன்றவளே பாவாடைராயன் காவல் கொண்ட மாகாளி மலையனூர் மகமாயி மனமிரங்கி வாருமம்மா" என்று அன்னை மாட்சிமை, புகழ், பிரதாபங்களை பூசாரிகள் உடுக்கை, பம்பை இசைத்து பாடி அன்னை பூஜையை ஏற்றுக்கொள்ள வரும்படி அழைத்தனர்.
     பம்பையும் உடுக்கையும் உச்ச கதியில் முழங்க பக்தர்களின் எண்ணமெல்லாம் அன்னையிடம் ஒன்றிய வேளை, கூப்பிய கரங்களும் மூடிய விழிகளுமாய் தியான நிலைக்கு சென்று பக்தர்கள் மனதில் எங்கள் எண்ணமெல்லாம் நிறைந்தவளே மங்காத மணிவிளக்கே, தாயே தயாபரி எங்கள் பூஜையை ஏற்றுக்கொள் அம்மா என்று வேண்டிய வேளை.
     அக்கூட்டத்திலிருந்து தன்னுடைய பாலகன் மீது அருளாக இரங்கி ஆனந்தம் கொண்டு ஆடினாள்
     அப்பொழுது பக்தர்கள் கூட்டத்திலிருந்து ஓரு பெண்மணியை அழைத்து தனக்கு உடைப்பதற்காக வாங்கப்பட்ட இரண்டு தேங்காய்களில் ஒன்றை எடுத்து கண்களை மூடி தன் இரு திருக்கரத்தால் உடலோடு அனைத்து அதற்கு ஆவாவரன சக்தியை உண்டாக்கி அதை அந்த பெண்மணியிடத்தில் கொடுத்தாள்.

                                               
     அன்னையின் திருக்கரத்தால் வழங்கப்பட்ட தேங்காயை வணங்கிப் பெற்றுக்கொண்டாள் அந்த பெண்மணி.  அப்பொழுது அன்னை அப்பெண்மணியை நோக்கி "என்னுடைய ஆவாஹன சக்தியை இந்த தேங்காயில் நிரப்பியுள்ளேன் இதை உன் இல்லத்திற்கு எடுத்துச்சென்று வைத்து 1 மண்டலம்(48 நாட்கள்) சகல விதமான அபிஷேக ஆராதனைகளை செய்து வர வேண்டும்.  அவ்வாறு நீ செய்து வருகின்ற வேளையில் அருவம், உருவம், அருவுருவம் என்ற வண்ணம், பஞ்சபூதத்தின் தத்துவமாக இந்தத் தேங்காயில் நானே சுயம்புவாகத் தோன்றுவேன் என்று வாக்கிட்டு மறைந்தாள்.

                                                  தேங்காயில் சுயம்புவாகத் தோன்றுதல்

     அன்னையிடம் பெற்ற திருத்தேங்காயை சகலவிதமான மரியாதையுடன் மயிலையில் உள்ள தனது இல்லத்திற்கு எடுத்து வந்து, அனைத்து பக்தர்கள் உதவியுடன் அன்னையை எழுந்தருளச்செய்தார்.
     அனைத்து பக்தர்களின் பேராதரவுடன் பூஜைகள் தொடங்கி அத்தனை விதமான அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் நடந்த வண்ணம் இருந்தது.  பக்தர்களின் பூஜையில் மன மகிழ்ந்த அன்னை அங்காள பரமேஸ்வரி மும்மூர்த்திகளும் தொழும் தேவி, சதாசிவனே காண ஏங்கும் அரியவள், கலனும் கலங்கும் காளி, உலக மக்களுக்கெல்லாம் மங்களத்தை அருளும் மங்கள சண்டி.  தெய்வங்களெல்லாம் தெய்வம் என்று போற்றி வணங்கும் மகாசக்தி அன்னை அங்காள பரமேஸ்வரி தேங்காயில் சுயம்பு உருவாகத் தோன்றினாள்.

                                               தனக்குரிய சக்கரத்தை உரைத்தல்

     தேங்காயில் சுயம்புவாகத் தோன்றிய அன்னை தன்னுடைய பாலகன் மேல் அருளாக வந்து தனக்கு செய்ய வேண்டிய பூஜை முறைகளையும் சக்தி பீட பக்தர்களிடம் வாக்கிட்டாள்.
     அன்னையின் வாக்கின்படி ஸ்ரீசக்கரம், மற்றும் தனாகர்ஷண யந்திரம் வரையப்பெற்று அனைத்து விதமான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு நிறைவாக ஸ்ரீசக்கரம் மற்றும் தனாகர்ஷண யந்திரங்கள் பஞ்ச பூதத்தில் வைத்து அன்னையால் ரகசியமாக உபதேசிக்கப்பட்ட சக்தி வாய்ந்த மூலமந்திரம் கொண்டு உருவேற்றப்பட்டது.

                                                 அன்னையை பீடத்தில் அமரச்செய்தல்

கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், துர்கா ஹோமம், சண்டி ஹொமம், போன்ற அனைத்து விதமான ஹோமங்களும் நாங்கு கால யாக பூஜையாக நடைபெற்றது.
மறுநாள் அதிகாலை கஜ பூஜை, கோ பூஜை, சுஹாசினி பூஜை, ஏழு கன்னி பூஜை (ஏழு புண்ணிய நதிகளை ஏழு கன்னிகளாக பாவித்து செய்யப்படும் பூஜை), லக்ஷ்மி குபேர பூஜை, என்று அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது.
பஞ்சபூதத்தில் வைத்து உருவேற்றப்பட்ட ஸ்ரீசக்கரம் மற்றும் தனாகர்ஷண யந்திரம் அன்னையின் பீடத்தில் பதிக்கப்பட்டது.
அன்னையின் பிரதிஷ்டை, பூஜைக்காக பல புண்ணிய ஸ்தலங்களிலிருக்கும் நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டது.  அந்த புண்ணிய நீரை ஏழு கன்னி பெண்களை ஏழு புண்ணிய நதிகளாக பாவித்து அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு குடம் வீதம் ஏழு புனித நீர் நிரம்பிய குடங்கள் கொடுக்கப்பட்டது.
யாக சாலையில் வைக்கப்பட்ட அனைத்து கலசங்களிலிருந்த சக்தியூட்டப்பட்ட புனிதநீர் சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  அதன் பின்னர் ஏழு கன்னி பெண்கள் ஏழு புண்ணிய தீர்த்தங்களின் சொரூபமாக அன்னைக்கு புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

அனைத்திற்கும் மூலமாகவும், முதல் தெய்வமாகவும், அண்டத்தின் இயக்கம் அத்தனைக்கும் ஆதாரமாகவும் தனக்கு மேலான தெய்வம் இல்லை என்ற நிலையில் "தலைமைத் தாய்" என்ற வண்ணம் ஸ்ரீசக்கரம் மற்றும் தனாகர்ஷண யந்திரத்தை பீடமாகக் கொண்டு சுயம்புவாக அமர்ந்தாள்.
தேங்காயில் தானே சுயம்புவாக தோன்றியதால் தன்னுடைய திருநாமம் "ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேசஸ்வரி" என்றும் மேலும் தான் அமர்ந்த இந்த இடம் "ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேஸ்வரி சக்தி பீடம்" என்று அழைக்கப்படும் என்று வாக்கிட்டாள்.

அங்காள பரமேஸ்வரி அன்னையின் சிறப்பு

1. பஞ்சபூதங்களையும் தன்னுள் கொண்ட தேங்காயில் தோன்றியதால் இங்கு அன்னை பஞ்சபூதங்களின் தத்துவமாக விளங்குகிறள்.  அன்னையின் தரிசனம் பஞ்சபூதங்களினால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து காக்கும்.
2. அருவம், உருவம், அருவுருவம் என்ற வண்ணம் அருள்வதால் போகியர்க்கு போகமும், யோகியர்க்கு யோகமும், சித்தியை நாடுபவர்களுக்கு சித்தியும் அளிக்க வல்லவள்.
3. ஸ்ரீசக்கரம் மற்றும் தனாகர்ஷண யந்திரத்தை பீடமாக கொண்டு அமர்ந்துள்ளதால் சகலவிதமான செல்வங்களையும், குறையில்லாத வாழ்வும் அருள்வாள்.
4. அன்னையின் வலது கண் லக்ஷ்மி சொரூபமாகவும் இடது கண் சரஸ்வதி சொரூபமாகவும் விளங்குவதால் லக்ஷ்மி கடாட்சமும் சரஸ்வதி கடாட்சமும் தன்னுடைய கடைக்கண் பார்வையிலேயே தன்னுடைய பக்தனுக்கு கிடைக்கச் செய்யும் அம்பிகை.
5. அங்கத்தில் காளனைக் கொண்டதால் அங்காளம்மன் எனப் பெயர் பெற்றாள்.  அங்கமெல்லாம் லிங்கம் கொண்டதால் அவள் அங்காளம்மன், முக்கண் உடையவள், விஷ்ணுவின் மாயா ரூபிணி, பிரம்ம சொரூபிணி இப்படி அன்னை மும்மூர்த்திகளின் வடிவாக விளங்குகிறாள்.  அன்னையின் தரிசனம் மும்மூர்த்திகளளின் முதலான அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன் உண்டாகும்
6. மந்திரத்தின் தலைவியாக அன்னை விளங்குவதால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மந்திர சித்தி விரைவில் அருளும் ஆற்றல் படைத்தவள்.
7. பில்லி சூன்யம், ஏவல், வைப்பு, பேய், பிசாசு, போன்ற தீவினைகள் அன்னையின் பெயரை கேட்டாலே ஓடிவிடும்.
8. அன்னை தன்னுடைய அவதாரத்தில் மருத்துவச்சியாக (மருத்துவம் பார்க்கும் பெண்) வேடம் பூண்டு வந்ததால் தன்னை நாடி வரும் பக்தர்களின் தீராத நோய்க்கு மருத்துவராகவும் விளங்குகிறார்
9. சிவபெருமானுக்கு உண்டான பிரம்ம ஹத்தி தோஷத்தை நீக்கியவள் அன்னை.  எனவே அவளை வணங்கும் பக்தர்கள் பிரம்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுபடுவர்.
10. அன்னை நாக சொரூபமாக, நவகிரக நாயகியாக விளங்குவதால் நாக தோஷமும், நவகிரக தோஷமும் மற்றும் சகலவிதமான தோஷங்களும், சகலவிதமான சாபங்களும் நீங்கப்பெற்று நன்மை அடைவர்.

அங்காள பரமேஸ்வரி சக்தி பீடத்தில் பூஜை மற்றும் திருவிழாக்கள்

1. ஒவ்வொரு மாதமும் அமாவாசை யாகம் அதனைத் தொடர்ந்து அபிஷேகம்
2. சித்திரை, மாசி, ஆடியில், வரும் அமாவாசையில் சுயம்பு அன்னைக்கு பக்தர்களால் செய்யப்படும் சிறப்பு அபிஷேகம்.
3. ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் ஞாயிற்று கிழமையில் சிறப்பு அலங்காரத்தில் அன்னைக்கு ஊஞ்சல் உற்சவம்.
4. திரு விளக்கு பூஜை, சுஹாசினி பூஜை, மற்றும் லக்ஷ்மி பூஜை.
5. ஆடி பூரத்தன்று "வளைகாப்பு உற்சவம்".
6. சித்திரை மாதம் "சித்திரைப் படையல்"
7. சித்திரா பௌர்னமி அன்று "108 மஞ்சள் குட நீராட்டு விழா"
8. ஆடி மாதம் பால் குடம், கரக ஊர்வலம், மற்றும் நெருப்பு சட்டி எடுத்தல்.
9. நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரம் மற்றும் அர்ச்சனை.
10. வைகாசி மாதம் "108 பூச்சொரிதல் விழா"

அன்னையே உங்கள் இல்லம் நாடி வரும் சக்தி பீடதின் சிறப்பு பூஜை

1. ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேஸ்வரி சக்தி பீடத்தில் சுமார் இரண்டு அடி உயரத்தில் ஐம்பொன் விக்கிரகம் உள்ளது.  சக்தி வாய்ந்த இந்த உற்சவர் சிலையை தங்கள் இல்லத்திற்கு அழைத்து சென்று பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் சக்தி பீடத்தில்  தெரிவித்தால் அவர்கள் முன்னிலையில் "பூ கட்டி உத்தரவு" கேட்கப்படும்.
அவ்வாறு கேட்கப்படும் உத்தரவில் அன்னையின் உத்தரவு கிடைத்தால் அன்னையின் உற்சவர் சிலை அந்த பக்தரின் எடுத்துச்சென்று திருவிளக்கு பூஜை, சுஹாசினி பூஜை லக்ஷ்மி பூஜை போன்ற பூஜைகள் செய்து தரப்படும்.
அன்னையை தங்கள் இல்லத்தில் எழுந்தருளச்செய்து பூஜை செய்யும் பக்தர்கள் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று குறைவிலா பெருவாழ்வு வாழ்வர்.
2. திருமணம் தடை படுவோர்க்கு சுயம்வரா பார்வதி ஹோமம் செய்து தரப்படும்.
3. குழந்தைப் பேறில்லாதவர்களுக்கு புத்திர காமேஷ்டி யாகம் செய்து தரப்படும்.
4. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய தன்வந்திரி ஹோமம் செய்து தரப்படும்
5. பில்லி சூன்யம், ஏவல் வைப்பு, போன்றவற்றால் பதிக்கப்பட்டவர்களுக்கு துர்கா ஹோமம், சண்டி ஹோமம், சுதர்சன ஹோமம் செய்து அவர்கள் சூன்யம் நீக்கப்படும்.
6. நவகிரக தோஷம் உடையவர்களுக்கு நவக்ரஹ தோஷ ப்ரீதி யாகம் செய்து தரப்படும்.
7. கால சர்ப்ப தோஷ பரிகாரம், செவ்வாய் தோஷ பரிகாரம் முதலியவை செய்யப்படும்.